Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டிய நிகழ்ச்சி

நீங்கள் கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டிய நிகழ்ச்சி

நீங்கள் கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டிய நிகழ்ச்சி

“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகள் லூக்கா 22:19-⁠ல் காணப்படுகிறது. தம் மரண நினைவுநாள் ஆசரிப்பைத் துவக்கி வைத்தபோது அவர் இவ்வார்த்தைகளைக் கூறினார். இயேசுவின் மரணம், பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியில் என்றென்றுமாக வாழும் நம்பிக்கையை மனிதகுலத்துக்கு அளித்திருக்கிறது. எனவே அவருடைய மரணநாள் நாம் நினைவுகூர வேண்டிய ஒரு முக்கிய நாள்.

இந்த வருடம் நினைவுநாள் ஆசரிப்பில் நீங்கள் கலந்துகொள்வீர்களா?

இந்த முக்கியமான நிகழ்ச்சியில் தங்களுடன் சேர்ந்து கலந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் தரும் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். பைபிளின் சந்திர நாட்காட்டியில் நிசான் 14-க்கு இணையான தேதியில் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் இந்நிகழ்ச்சி நடைபெறும். இந்த வருடம் அது ஏப்ரல் 2, திங்கட்கிழமை அன்று வருகிறது. இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தையும் அது துவங்கும் சரியான நேரத்தையும் உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.