Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இந்த உவமையை விவரியுங்கள்

லூக்கா 10:29-37-⁠ல் பதிவாகியுள்ள இயேசுவின் உவமையில் இடம்பெறுகிற மூன்று கதாபாத்திரங்களை அடையாளம் காட்டுங்கள். உங்கள் பதில்களைக் கீழே எழுதுங்கள்.

1. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

2. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

3. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

கலந்தாலோசிக்க: அந்தச் சமாரியனின் செயலில் எது உங்களைக் கவர்ந்தது? நீங்கள் எப்படி நல்ல அயலகத்தானாக இருக்கலாம்?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

கீழேயுள்ள பைபிள் புத்தகங்களை எழுதியவர்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள், அவை எழுதி முடிக்கப்பட்ட காலப்பகுதியைக் குறித்துக் காட்டுங்கள்.

பொ.ச.மு. 537  460 455 பொ.ச. 50-52 பொ.ச. 66-70

4. 2 நாளாகமம்

5. எஸ்றா

6. கலாத்தியர்

நான் யார்?

7. நான் முதியவர்களிடமும் வாலிபர்களிடமும் ஆலோசனைக் கேட்டேன். ஆனால் வாலிபர்களின் ஆலோசனையையே எடுத்துக் கொண்டேன்.

நான் யார்?

8. பவுல் என்னை ஓர் உடன்படிக்கைக்கும் சீனாய் மலைக்கும் எருசலேமுக்கும் ஒப்பிட்டுப் பேசினார்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 9 கடவுளைச் சேவிப்போர் எப்படி நோவாவைப் போல் இருக்க முடியும்? (2 பேதுரு 2:____)

பக்கம் 10 நீதிமான்கள் எதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்? (சங்கீதம் 37:____)

பக்கம் 12 நீங்கள் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசப்பட்டால் உங்கள் கோபத்தை அடக்க எது உதவும்? (நீதிமொழிகள் 19:____)

பக்கம் 26 நாம் என்ன செய்தால் இயேசுவின் நண்பர்களாக இருக்க முடியும்? (யோவான் 15:____)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 29-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. ஆசாரியன்.

2. லேவியன்.

3. சமாரியன்.

4. எஸ்றா, பொ.ச.மு. 460.

5. எஸ்றா, பொ.ச.மு. 460.

6. பவுல், பொ.ச. 50-52.

7. ரெகொபெயாம்.​—⁠2 நாளாகமம் 10:3-14.

8. ஆகார்.​—⁠கலாத்தியர் 4:22-25.