இறப்புக்குப் பின் வாழ்க்கை பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
இறப்புக்குப் பின் வாழ்க்கை பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
இறப்புக்குப் பிறகு மனிதன் உயிர்வாழ்வதைப்பற்றி பைபிள் இப்படித்தான் கற்பிக்கிறது என்று அநேகரிடம் சொல்லப்படுகிறது; உண்மையைச் சொன்னால், பைபிள் அவ்வாறு கற்பிப்பதில்லை. உதாரணமாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள விதமாக பைபிள் கற்பிப்பதில்லை:
◼ இறந்துபோன நல்லவர்கள் எல்லாரும் பரலோகத்திற்குச் செல்கிறார்கள்.
◼ இறந்துபோன உறவினர்களை பயபக்தியோடு வணங்க வேண்டும்.
◼ இறந்தவர்கள் உயிரோடிருக்கிறவர்களுக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியும்.
◼ மனிதனுக்கு அழியாத ஆத்துமா இருக்கிறது என்ற இந்தக் கோட்பாட்டை அநேக மதங்கள் கற்பிக்கின்றன; எரிநரக வாதனை, மறுபிறவி போன்ற பைபிள்சாரா போதனைகளுக்கு இக்கோட்பாடே அடிப்படை.
என்றாலும், இறந்தவர்களைப்பற்றி பைபிள் கற்பிக்கும் காரியங்கள் மனதுக்கு இதமளிக்கின்றன, ஆறுதலளிக்கின்றன. இங்கே காட்டப்பட்டுள்ள புத்தகத்தில் அவை தெளிவாகவும் எளிதாகவும் விளக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தைப்பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.
□ பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தைப்பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.
□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.