நினைவுகூர வேண்டிய ஓர் இரவு
நினைவுகூர வேண்டிய ஓர் இரவு
உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்—வியாழக்கிழமை, ஏப்ரல் 9, 2009
இயேசு கிறிஸ்து இறப்பதற்கு முந்திய இரவு அது. தமது மரணத்தை நினைவுகூர அவர் ஓர் அனுசரிப்பை தொடங்கி வைத்தார். அதில் திராட்சமதுவையும் புளிப்பில்லாத ரொட்டியையும் சின்னங்களாகப் பயன்படுத்தினார்; இந்த அனுசரிப்பை “என் நினைவாக . . . செய்துகொண்டிருங்கள்” என்று கட்டளையிட்டார்.—லூக்கா 22:19, NW.
இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, யெகோவாவின் சாட்சிகள் இதை வருடந்தோறும் அனுசரித்து வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு உங்களையும் அன்புடன் அழைக்கிறார்கள். இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் தெரிந்துகொள்ள தயவுசெய்து அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள். (g 3/09)