Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—எப்போது?

உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—எப்போது?

விசேஷச் சொற்பொழிவு

உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—எப்போது?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பெற முயன்றிருக்கிறார்கள். ஆனால், உண்மையான சமாதானம் எட்டாக் கனியாகவே இருந்திருக்கிறது. ஏன்? அதற்கான இரண்டு அடிப்படைக் காரணங்களை பைபிள் தருகிறது. அதோடு, ஆறுதலளிக்கும் இந்த உறுதியையும் அது அளிக்கிறது: உலகெங்கும் உள்ள மனிதருக்கு நிஜமான, நிலையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் தரப்போவதாகக் கடவுள் வாக்குறுதி தந்திருக்கிறார்.

அப்படிப்பட்ட சமாதானமும் பாதுகாப்பும் எப்போது, எப்படி உண்மையில் கிடைக்கும்? அந்த அருமையான சூழலை அனுபவித்து மகிழ நீங்கள் என்ன செய்ய வேண்டும்? “உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—எப்போது?” என்ற பேச்சில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படும். பைபிள் அடிப்படையிலான இந்தச் சொற்பொழிவு உலகெங்கும் 230-க்கும் அதிகமான நாடுகளில் கொடுக்கப்படும். அது பெரும்பாலும், ஏப்ரல் 18, 2010, ஞாயிற்றுக்கிழமை அன்று யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் கொடுக்கப்படும். உங்கள் பகுதியில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகள், அதற்கான நேரத்தையும் விலாசத்தையும் உங்களுக்குத் தெரிவிப்பதில் சந்தோஷப்படுவார்கள். இந்தச் சொற்பொழிவுக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம். (w10-E 04/01)