பகுதி 2—மீண்டும் ஒரு பார்வை!
உங்களுக்கு பைபிளை சொல்லித்தருபவரோடு இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பொய் மதங்களைக் கடவுள் என்ன செய்யப்போகிறார்?
(பாடம் 13-ஐப் பாருங்கள்.)
யாத்திராகமம் 20:4-6-ஐ வாசியுங்கள்.
உருவங்களை வைத்து வணங்குவதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?
(பாடம் 14-ஐப் பாருங்கள்.)
இயேசு யார்?
(பாடம் 15-ஐப் பாருங்கள்.)
இயேசுவின் எந்தக் குணங்கள் உங்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது?
(பாடம் 17-ஐப் பாருங்கள்.)
யோவான் 13:34, 35-ஐயும் அப்போஸ்தலர் 5:42-ஐயும் வாசியுங்கள்.
இன்று யார் உண்மையான கிறிஸ்தவர்கள்? அவர்கள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என்று நீங்கள் எதை வைத்து நம்புகிறீர்கள்?
(பாடங்கள் 18-ஐயும் 19-ஐயும் பாருங்கள்.)
சபையின் தலைவர் யார்? சபையை அவர் எப்படி தலைமைதாங்கி நடத்துகிறார்?
(பாடம் 20-ஐப் பாருங்கள்.)
மத்தேயு 24:14-ஐ வாசியுங்கள்.
இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறுகிறது?
நீங்கள் யாரிடமெல்லாம் நல்ல செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள்?
(பாடங்கள் 21-ஐயும் 22-ஐயும் பாருங்கள்.)
ஞானஸ்நானம் எடுக்க நினைப்பது ஒரு நல்ல லட்சியம் என்று யோசிக்கிறீர்களா? ஏன்?
(பாடம் 23-ஐப் பாருங்கள்.)
சாத்தானும் பேய்களும் விரிக்கிற வலையில் நீங்கள் எப்படி விழாமல் இருக்கலாம்?
(பாடம் 24-ஐப் பாருங்கள்.)
நம்மை எப்படி வாழ வைக்க கடவுள் நினைக்கிறார்?
(பாடம் 25-ஐப் பாருங்கள்.)
மனிதர்களுக்கு ஏன் கஷ்டமும் சாவும் வருகிறது?
(பாடம் 26-ஐப் பாருங்கள்.)
யோவான் 3:16-ஐ வாசியுங்கள்.
பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிக்க யெகோவா என்ன செய்திருக்கிறார்?
(பாடம் 27-ஐப் பாருங்கள்.)
பிரசங்கி 9:5-ஐ வாசியுங்கள்.
இறந்தவர்களின் நிலைமை என்ன?
இறந்துபோன கோடிக்கணக்கான ஆட்களை இயேசு என்ன செய்வார்?
(பாடங்கள் 29-ஐயும் 30-ஐயும் பாருங்கள்.)
கடவுளுடைய அரசாங்கம் எப்படி மனித அரசாங்கங்களைவிட சிறந்தது?
(பாடங்கள் 31-ஐயும் 33-ஐயும் பாருங்கள்.)
கடவுளுடைய அரசாங்கம் இப்போது ஆட்சி செய்வதை நீங்கள் நம்புகிறீர்களா? ஏன்? அது எப்போது ஆட்சி செய்ய ஆரம்பித்தது?
(பாடம் 32-ஐப் பாருங்கள்.)