பகுதி 3—மீண்டும் ஒரு பார்வை!
உங்களுக்கு பைபிளை சொல்லித்தருபவரோடு இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நீதிமொழிகள் 27:11-ஐ வாசியுங்கள்.
நீங்கள் ஏன் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க ஆசைப்படுகிறீர்கள்?
(பாடம் 34-ஐப் பாருங்கள்.)
ஒரு விஷயத்தைப் பற்றி பைபிளில் நேரடியான கட்டளை இல்லாதபோது நீங்கள் எப்படி சரியான முடிவை எடுக்கலாம்?
(பாடம் 35-ஐப் பாருங்கள்.)
நீங்கள் எப்படி எல்லா விஷயங்களிலும் நேர்மையாக நடந்துகொள்ளலாம்?
(பாடம் 36-ஐப் பாருங்கள்.)
மத்தேயு 6:33-ஐ வாசியுங்கள்.
வேலை விஷயத்திலும் பண விஷயத்திலும் நீங்கள் எப்படி ‘எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கு . . . முதலிடம் கொடுக்கலாம்’?
(பாடம் 37-ஐப் பாருங்கள்.)
யெகோவாவைப் போலவே நீங்களும் உயிரை மதிப்பதை எப்படிக் காட்டலாம்?
(பாடம் 38-ஐப் பாருங்கள்.)
அப்போஸ்தலர் 15:29-ஐ வாசியுங்கள்.
இரத்தம் சம்பந்தப்பட்ட யெகோவாவின் கட்டளைக்கு நீங்கள் எப்படிக் கீழ்ப்படியலாம்?
யெகோவாவின் கட்டளைகள் உங்களுக்கு நியாயமாகத் தெரிகிறதா?
(பாடம் 39-ஐப் பாருங்கள்.)
2 கொரிந்தியர் 7:1-ஐ வாசியுங்கள்.
உடலிலும் உள்ளத்திலும் சுத்தமாக இருப்பது என்றால் என்ன?
(பாடம் 40-ஐப் பாருங்கள்.)
1 கொரிந்தியர் 6:9, 10-ஐ வாசியுங்கள்.
செக்ஸ் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா?
குடிப்பதைப் பற்றி பைபிள் சொல்வது என்ன?
(பாடங்கள் 41-ஐயும் 43-ஐயும் பாருங்கள்.)
மத்தேயு 19:4-6, 9-ஐ வாசியுங்கள்.
திருமணம் பற்றி கடவுள் என்ன சொல்கிறார்?
திருமணத்தையும் விவாகரத்தையும் ஏன் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும்?
(பாடம் 42-ஐப் பாருங்கள்.)
யெகோவாவுக்குப் பிடிக்காத சில கொண்டாட்டங்களும் பண்டிகைகளும் என்ன? அதெல்லாம் ஏன் அவருக்குப் பிடிக்காது?
(பாடம் 44-ஐப் பாருங்கள்.)
யோவான் 17:16-ஐயும் அப்போஸ்தலர் 5:29-ஐயும் வாசியுங்கள்.
நீங்கள் எப்படி நடுநிலையோடு இருக்கலாம்?
மனிதர்களின் சட்டம் கடவுளின் சட்டத்துக்கு எதிராக இருந்தால் என்ன செய்வீர்கள்?
(பாடம் 45-ஐப் பாருங்கள்.)
மாற்கு 12:30-ஐ வாசியுங்கள்.
யெகோவாவை நேசிப்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்?
(பாடங்கள் 46-ஐயும் 47-ஐயும் பாருங்கள்.)