Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கான எங்களுடைய அழைப்பு

உங்களுக்கான எங்களுடைய அழைப்பு

உங்களுக்கான எங்களுடைய அழைப்பு

ந்தச் சிற்றேட்டினுடைய பக்கங்களின் வாயிலாக உங்களிடம் பேசுவதை நாங்கள் அனுபவித்துக்களித்தோம். யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி அதிகத்தைக் கற்றறிவதை நீங்கள் அனுபவித்துக் களித்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் எங்களைச் சந்திக்க நாங்கள் விடுக்கும் அழைப்பை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள். எங்களுடைய கூட்டங்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதைப் பாருங்கள். கிறிஸ்துவினுடைய ராஜ்யத்தின் கீழ் ஒரு பரதீஸிய பூமியைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள நாங்கள் எவ்வாறு முயற்சி செய்கிறோம் என்பதைப் பாருங்கள்.

கடவுள் அதை வாக்களித்திருக்கிறார். “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) பத்தொன்பது நூற்றாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. காத்திருக்கும் காலம் அதன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. உலக நிலைமைகள் இதைக் குறித்துக்காட்டுகின்றன. இயேசுவினுடைய வாக்குறுதியின் நிறைவேற்றம் சமீபித்துக்கொண்டுவருகிறது: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.”—லூக்கா 21:28.

‘நாளானது சமீபித்துவருகிறதை நீங்கள் பார்க்கையில் சபை கூடிவருதலை விட்டுவிடாமல் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் தூண்டிக்கொண்டிருக்கவேண்டும்,’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபிரெயர் 10:24, 25) எங்களோடு கூடிவருவதன் மூலம் பவுலின் ஆலோசனைக்குச் செவிசாயுங்கள் என்பதே உங்களுக்கான எங்களுடைய அழைப்பு.