Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுடைய குடும்பத்துக்கு மற்ற உதவிகள்

உங்களுடைய குடும்பத்துக்கு மற்ற உதவிகள்

உங்களுடைய குடும்பத்துக்கு மற்ற உதவிகள்

உங்கள் குடும்பத்துக்கு மதிப்புவாய்ந்த மற்ற உதவி புத்தகங்கள் வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒன்றை அல்லது அனைத்தையுமே நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அடுத்த பக்கத்திலுள்ள பொறுத்தமான விலாசத்தைப் பயன்படுத்தி, Watch Tower என்று முகவரியிட்டு எழுதுங்கள்.

என்னுடைய பைபிள் கதைப் புத்தகம். பெரிய அளவு பக்கங்களைக் கொண்ட (சுமார் 7”×9”) இந்த நூல் பைபிளிலிருந்து எடுக்கப்பட்ட 116 நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. சரித்திரத்தில் நிகழ்ந்த அதே வரிசைக்கிரமத்தில் கதைகள் தோன்றுகின்றன. இந்தப் புத்தகம் சிறுவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டது. படிக்கத் தெரியாத மிகச் சிறிய குழந்தைகள்கூட இதில் உள்ள 125 அழகான படங்கள் மூலமாக பயனடையலாம். 256 பக்கங்கள், சாதாரண அளவைவிட பெரிய எழுத்துக்கள், நல்ல தரமான காகிதம். உங்களுக்குத் தபால் மூலமாக ரூ.45-க்கு அனுப்பி வைக்கப்படும்.

பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல். இந்தப் புத்தகமும் சிறுவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டது. இது பெற்றோரையும் பிள்ளைகளையும் நெருங்கி வரும்படி செய்து, படிப்பை மகிழ்ச்சியுள்ளதாக்கும் போதிக்கும் முறையை உபயோகிக்கிறது. பைபிளின் உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களை குழந்தைகளுக்கு கற்பிப்பதே இந்தப் புத்தகத்தின் முக்கிய நோக்கமாகும். வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய சரியான நியமங்களை குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம், நீங்கள் உண்மையாகவே அவர்களுக்கு தற்கால பிரச்னைகளை சமாளிக்க உதவி செய்வீர்கள். அழகான படங்கள் மூலம் விளக்கப்பட்ட, எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய, 192 பக்கங்கள் கொண்ட பாக்கட் அளவு புத்தகம். ரூ.15-க்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள். இன்றைய ஒழுக்கங்கெட்ட உலகத்தின் செல்வாக்கை எதிர்த்து போராடுவதற்கு பருவ வயதினருக்கு இந்த புத்தகம் உதவிசெய்யும். நேர்மையின்மை, மதுபானம் மற்றும் போதை மருந்துகளின் துர்ப்பிரயோகம், இன ஒழுக்கம், எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகள், விவாக நோக்குடன் பழகுதல்—இவை யாவும் இதில் சிந்திக்கப்படும் சில பொருள்கள் ஆகும். 320 பக்கங்களையுடையது, ரூ.25 மட்டுமே.

நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம். இந்தப் புத்தகம் அடிப்படை பைபிள் சத்தியங்களைக் கொண்டுள்ளது, மேலும் பூமிக்குரிய பரதீஸில் நித்தியமாய் வாழும் நம்பிக்கையை விளக்கமாய் எடுத்துக் காட்டுகிறது. மரணத்தின்போது என்ன நடக்கிறது? உயிர்த்தெழுதல்—யாருக்கு, எங்கே? கடவுள் அக்கிரமத்தை ஏன் அனுமதித்திருக்கிறார்? மகிழ்ச்சியுள்ள குடும்ப வாழ்க்கையைக் கொண்டிருக்க பைபிள் உங்களுக்கு எவ்வாறு உதவிசெய்ய முடியும்? என்பவற்றைப்போன்ற கேள்விகளுக்கு பைபிளின் திருப்திதரும் பதில்களும் இதில் அடங்கியிருக்கின்றன. புரிந்துகொள்வதற்கு எளிதாயுள்ளது. அழகிய படங்களைக் கொண்டது, 256 பக்கங்களையுடையது. ரூ.25-க்குக் கிடைக்கும்.

(விலை மாறுதலுக்குட்பட்டது.)