Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

4. பந்தபாசம் இல்லாதவர்கள்

4. பந்தபாசம் இல்லாதவர்கள்

4. பந்தபாசம் இல்லாதவர்கள்

“பந்தபாசம் இல்லாதவர்களாக” இருப்பார்கள்.​—2 தீமோத்தேயு 3:1-3.

● நார்த் வேல்ஸில், குடும்ப வன்முறைக்கு ஆளாகிறவர்களுக்கு உதவி செய்கிற குழுவில் கிறிஸ் வேலை செய்கிறார். “ரொம்ப மோசமாக அடி வாங்கியிருந்த ஒரு பெண் என்னிடம் வந்திருந்தாள். இதற்கு முன்புகூட அவள் வந்திருக்கிறாள். ஆனால் இந்த முறை அடையாளமே தெரியாத அளவுக்கு ரொம்ப பயங்கரமாக அடி வாங்கியிருந்தாள்” என்று சொல்கிறார் கிறிஸ். “மற்ற பெண்கள் எல்லாம் தலைநிமிர்ந்துகூட பார்க்க முடியாத அளவுக்கு உணர்ச்சிபூர்வமாக ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றும் அவர் சொல்கிறார்.

உண்மைத் தகவல்கள் எதைக் காட்டுகின்றன? ஒரு ஆப்பிரிக்க நாட்டில் ஏறக்குறைய மூன்று பெண்களில் ஒருவர் சின்ன வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார். மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான ஆண்கள் தங்களுடைய மனைவிகளை அடிப்பதில் எந்தத் தப்பும் இல்லை என்று நினைப்பதாக அதே நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு காட்டுகிறது. ஆனால், குடும்பத்தில் நடக்கிற வன்முறைகளுக்கு ஆளாவது பெண்கள் மட்டுமே கிடையாது. உதாரணத்துக்கு, கனடாவில் கிட்டத்தட்ட பத்து ஆண்களில் மூன்று பேர் தங்களுடைய மனைவிகளால் அடிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை என்ன? குடும்பத்தில் வன்முறை காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. முன்பெல்லாம், இதைப் பற்றி யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள் இப்போதெல்லாம் வெளியே சொல்கிறார்கள், அவ்வளவுதான்.

இந்த ஆட்சேபணை நியாயமானதா? மக்கள் மத்தியில், குடும்ப வன்முறை சம்பந்தமான விழிப்புணர்வு சமீப வருஷங்களில் அதிகமாகியிருக்கிறது. குடும்ப வன்முறை சம்பந்தமான விழிப்புணர்வு அதிகமாக, அதிகமாக இந்தப் பிரச்சினை குறைய வேண்டும். ஆனால் குறையவில்லையே! அப்படியென்றால் இன்று மக்கள் மத்தியில் பந்தபாசம் குறைந்துவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இரண்டு தீமோத்தேயு 3:1-3-ல் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் இப்போது நடக்கின்றனவா? இயல்பாகவே குடும்பத்தினர்மேல் வரவேண்டிய பந்தபாசம் நிறைய பேருக்குக் குறைந்துவிட்டதா?

இன்று நிறைவேறி வருகிற ஐந்தாவது தீர்க்கதரிசனம் நாம் வாழ்கிற இந்தப் பூமியோடு சம்பந்தப்பட்டது. இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

“சமுதாயத்தில் நடக்கிற குற்றச்செயல்களில் ரொம்பவே குறைவாக அறிக்கை செய்யப்படுவது குடும்ப வன்முறைதான். ஒரு பெண் 35 தடவையாவது தன் கணவரிடம் அடிவாங்கிய பிறகுதான் போலீசைத் தொடர்புகொள்கிறாள்.”​—குடும்ப வன்கொடுமைக்கான வேல்ஸ் உதவி மையத்தின் செய்தித் தொடர்பாளர்.