Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 4

சாத்தான் சொன்னதைக் கேட்டதால் என்ன ஆனது?

சாத்தான் சொன்னதைக் கேட்டதால் என்ன ஆனது?

கடவுள் சொன்னதை ஆதாம்-ஏவாள் கேட்கவில்லை, அதனால் செத்துப்போனார்கள். ஆதியாகமம் 3:6, 23

பாம்பு சொன்னதைக் கேட்டு அந்தப் பழத்தை ஏவாள் சாப்பிட்டாள். அதை ஆதாமுக்கும் கொடுத்தாள், அவனும் சாப்பிட்டான்.

அவர்கள் செய்தது பெரிய தவறு, இதைத்தான் பாவம் என்று பைபிள் சொல்கிறது. அதனால் அந்தத் தோட்டத்திலிருந்து அவர்களைக் கடவுள் வெளியே அனுப்பிவிட்டார்.

அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் ரொம்ப கஷ்டப்பட்டார்கள். கடைசியில், வயதாகி செத்துப்போனார்கள். செத்த பிறகு பரலோகத்துக்கோ நரகத்துக்கோ அவர்கள் போகவில்லை, அப்படியே மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.

இறந்தவர்களால் எதுவுமே செய்ய முடியாது. ஆதியாகமம் 3:19

நாம் எல்லாரும் ஆதாம்-ஏவாளின் பிள்ளைகளாக இருப்பதால் நமக்கும் மரணம் வருகிறது. இறந்தவர்களால் பார்க்கவோ கேட்கவோ முடியாது, எதையுமே செய்ய முடியாது.—பிரசங்கி 9:5, 10.

மனிதர்கள் சாக வேண்டும் என்பது யெகோவாவின் ஆசை இல்லை. இறந்தவர்களை அவர் சீக்கிரத்தில் உயிரோடு எழுப்புவார். அவர் சொல்வதைக் கேட்டு நடந்தால், அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.