முகவுரை
கடவுள் நமக்கு ஒரு அன்பான அப்பா மாதிரி. 1 பேதுரு 5:6, 7
கடவுள்தான் நம்மைப் படைத்தார். நம்மேல் அதிக அன்பு வைத்திருக்கிறார். அன்பான அப்பா அவருடைய பிள்ளைகளுக்கு புத்திமதி சொல்கிற மாதிரி கடவுளும் நமக்கு புத்திமதி சொல்கிறார். எப்படி வாழ வேண்டுமென எல்லாருக்கும் சொல்லிக்கொடுக்கிறார்.
கடவுள் நமக்கு உண்மைகளைச் சொல்லித்தருகிறார், அதைத் தெரிந்துகொண்டால் நாம் சந்தோஷமாக வாழலாம், நம்பிக்கையோடு இருக்கலாம்.
கடவுள் சொல்வதைக் கேட்டால் அவர் உங்களுக்கு நல்ல வழியை காட்டுவார், உங்களைப் பாதுகாப்பார், பிரச்சினைகளைச் சமாளிக்க உதவி செய்வார்.
அது மட்டுமல்ல, நீங்கள் என்றென்றும் வாழலாம்!