பாகம் 11
யெகோவா நம் ஜெபத்தைக் கேட்கிறாரா?
நாம் செய்கிற ஜெபங்களைக் கடவுள் கண்டிப்பாகக் கேட்பார். 1 பேதுரு 3:12
யெகோவா நாம் செய்கிற ‘ஜெபத்தைக் கேட்கிறார்.’ (சங்கீதம் 65:2) நம் மனதிலிருந்து அவரிடம் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
யெகோவாவிடம் மட்டும்தான் ஜெபம் செய்ய வேண்டும், வேறு யாரிடமும் ஜெபம் செய்யக்கூடாது.
1 யோவான் 5:14
எதைப் பற்றி வேண்டுமானாலும் நாம் ஜெபம் பண்ணலாம்.கடவுளுடைய விருப்பம் பரலோகத்தில் நடப்பது போலவே பூமியிலும் நடக்க வேண்டும் என்று ஜெபம் பண்ணுங்கள்.
இயேசு வழியாக யெகோவாவிடம் ஜெபம் பண்ணுங்கள்.—யோவான் 15:16.
யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள அவரிடம் உதவி கேளுங்கள். சாப்பாடு, வேலை, வீடு, துணிமணி, ஆரோக்கியம்... இந்த மாதிரியான விஷயங்களுக்காகவும் ஜெபம் பண்ணலாம்.