பகுதி நான்கு
“என்னுடைய பரிசுத்த பெயரை வைராக்கியத்தோடு கட்டிக்காப்பேன்”—தூய வணக்கம் கோகுவின் தாக்குதலிலிருந்து தப்பிக்கிறது
முக்கியக் குறிப்பு: யெகோவா தன்னுடைய மக்களை மிகுந்த உபத்திரவத்திலிருந்து பாதுகாக்கிறார்
யெகோவா நம்மை நேசிக்கிறார், அதேசமயத்தில் நம் செயல்களுக்காக நம்மிடம் கணக்குக் கேட்பார். அவரை வணங்குவதாகச் சொல்கிறவர்கள் அவருக்குத் துரோகம் செய்யும்போது அவர் எப்படி உணருகிறார்? மிகுந்த உபத்திரவத்திலிருந்து யாரைப் பாதுகாப்பது என்பதை எதன் அடிப்படையில் தீர்மானிப்பார்? அன்பான கடவுளான யெகோவா, கோடிக்கணக்கான பொல்லாத ஆட்களை அழிக்கப்போவதற்குக் காரணம் என்ன?
இந்தப் பகுதியில்
அதிகாரம் 15
“நான் உன்னுடைய விபச்சாரத்துக்கு ஒரு முடிவுகட்டுவேன்”
எசேக்கியேல் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகங்களில் உள்ள விபச்சாரிகளைப் பற்றிய விவரிப்பிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?
அதிகாரம் 16
“நெற்றியில் அடையாளம் போடு”
எசேக்கியேலின் காலத்தில், உண்மையுள்ளவர்கள் தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தைப் பெற்றுக்கொண்ட விதம், நம்முடைய காலத்துக்கும் பொருந்துகிறது.
அதிகாரம் 17
“கோகுவே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன்”
மாகோகு தேசத்தின் கோகு யார், அவன் தாக்கப்போகும் தேசம் எது?
அதிகாரம் 18
“என்னுடைய கோபம் நெருப்பாகப் பற்றியெரியும்”
கோகுவின் தாக்குதல் யெகோவாவின் கோபத்தைக் கிளறும்; தன்னுடைய மக்களைப் பாதுகாக்க அவர் நடவடிக்கை எடுப்பார்