Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கெட்ட ஓர் உலகத்தைக் கடவுள் அழிக்கிறார்

கெட்ட ஓர் உலகத்தைக் கடவுள் அழிக்கிறார்

கெட்ட ஓர் உலகத்தைக் கடவுள் அழிக்கிறார்

18 ஆதாமின் சந்ததியார் பெருகினார்கள். அவர்களும் மிக மோசமானவர்களாக ஆனார்கள். கடவுள் அவர்களை அழிக்க தீர்மானித்தார்.—ஆதியாகமம் 6:1, 5, 7

19 ஆனால் நோவா என்ற நல்லவன் ஒருவன் இருந்தான்.—ஆதியாகமம் 6:8, 9

கெட்ட ஜனங்கள் அழிக்கப்படும் போது, அவனும் அவனுடைய குடும்பமும் காப்பாற்றப்பட யெகோவா தேவன் ஒரு பெரிய கப்பலை கட்டும்படி சொன்னார். இந்தக் கப்பல் ஒரு பெரிய பெட்டியைப் போன்ற வடிவமுடையது. அது பேழை என்று அழைக்கப்பட்டது.—ஆதியாகமம் 6:13, 14

20 அவர்கள் மிருகங்களைப் பேழைக்குள்ளே அழைத்துச் சென்றார்கள்.—ஆதியாகமம் 6:19-21

21 யெகோவா ஒரு பெரிய மழையை வரப்பண்ணினார். கெட்டவர்கள் எல்லோரும் மாண்டார்கள். பேழையில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?—ஆதியாகமம் 6:17; 7:11, 12, 21; 1 பேதுரு 3:10-12