Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மரணம் என்றால் என்ன?

மரணம் என்றால் என்ன?

மரணம் என்றால் என்ன?

15 மனிதன் மரிக்கும்போது மண்ணுக்குத் திரும்புகிறான். அவனுக்கு இனிமேல் ஒன்றும் தெரியாது.—சங்கீதம்146:4

மரித்தவர்கள் உங்களிடம் பேச முடியாது அல்லது வேறு ஒன்றுமே செய்ய முடியாது.—பிரசங்கி 9:5, 10

16 ஆனால் அநேக தேவதூதர்கள் கெட்டவர்களாக மாறினார்கள். இப்பொழுது அவர்கள் மரித்துபோன ஆட்களாக பாவனை செய்கிறார்கள். நாம் உண்மையிலேயே மரிப்பதில்லை என்பதை நாம் நம்பவேண்டும் என்பதற்காக அப்படிச் செய்கிறார்கள்.—ஆதியாகமம் 6:1, 2; யூதா 6

17 எனவே பிசாசுகள் என்று அழைக்கப்படும் அந்தக் கெட்ட தூதர்களை நாம் நம்பக்கூடாது என்பதே யெகோவா தேவனின் விருப்பம்.—யாத்திராகமம் 22:18; உபாகமம் 18:10, 11; 32:17

மாந்திரீகம், சூனியம், சோதிடம் போன்ற காரியங்களை விட்டுவிடச் சொல்லுகிறார்.—கலாத்தியர் 5:19-21