ஆலயம்
இடம்விட்டு இடம் மாற்றப்பட்ட வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பதிலாக, எருசலேமில் கட்டப்பட்ட நிரந்தரக் கட்டிடம். இஸ்ரவேலர்களுடைய வழிபாட்டின் மைய இடமாக இது இருந்தது. முதல் ஆலயத்தை சாலொமோன் கட்டினார், அது பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது. பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பின்பு, இரண்டாவது ஆலயத்தை செருபாபேல் கட்டினார். பின்பு, மகா ஏரோது அதை மறுபடியும் கட்டினான். பைபிள் இதை ‘யெகோவாவின் வீடு’ என்று பல இடங்களில் குறிப்பிடுகிறது. (யாத் 23:19; 34:26; 1ரா 6:1) ஆலயம் என்ற வார்த்தை, யெகோவா குடியிருக்கிற பரலோகத்தையும் குறிக்கிறது. (யாத் 25:8, 9; 2ரா 10:25; 1நா 28:10; வெளி 11:19)—இணைப்பு B8-ஐயும் B11-ஐயும் பாருங்கள்.