Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எக்காளம்

எக்காளம்

வாயினால் ஊதப்படும் உலோகக் கருவி. அறிவிப்பு செய்வதற்காகவும் இசை இசைப்பதற்காகவும் இது பயன்படுத்தப்பட்டது. இரண்டு வெள்ளி எக்காளங்களை யெகோவா செய்யச் சொன்னதாக எண்ணாகமம் 10:2 சொல்கிறது; மக்களை ஒன்றுகூட்டுவதற்கும், ஒரு இடத்திலிருந்து புறப்படச் செய்வதற்கும், போர் அறிவிப்பு செய்வதற்கும் வெவ்வேறு தொனிகளில் இவை ஊதப்பட்டன. மிருகங்களின் கொம்புகளில் செய்யப்பட்ட ‘ஊதுகொம்பை’ போல வளைவாக இல்லாமல் இவை நேராக இருந்திருக்கலாம். ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளில் எக்காளங்களும் இருந்தன. ஆனால், இவை எப்படிச் செய்யப்பட்டிருந்தன என்று பைபிள் குறிப்பிடுவதில்லை. யெகோவாவின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டபோதும், அவர் மூலமாகச் சில முக்கியச் சம்பவங்கள் நடந்தபோதும் அடையாள அர்த்தத்தில் எக்காளம் முழங்கப்பட்டது.—2நா 29:26; எஸ்றா 3:10; 1கொ 15:52; வெளி 8:7-11:15.