Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதிர் பொறுக்குதல்

கதிர் பொறுக்குதல்

அறுவடை செய்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ விட்டுவிடும் கதிர்களை மற்றவர்கள் சேகரிக்கிற ஒரு வழக்கம். அறுவடை செய்யும்போது வரப்பு ஓரத்தில் இருக்கிற கதிர்களை முழுமையாக அறுக்கக் கூடாது என்றும், ஒலிவப் பழங்களையும், திராட்சைப் பழங்களையும் முழுமையாக அறுவடை செய்யக் கூடாது என்றும் திருச்சட்டம் கட்டளையிட்டிருந்தது. அறுவடைக்குப் பிறகு மீதியாக இருப்பதை எடுத்துக்கொள்கிற உரிமையை ஏழைகளுக்கும், பாவப்பட்டவர்களுக்கும், வேறு நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கும், அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும், விதவைகளுக்கும் கடவுள் கொடுத்திருந்தார்.—ரூ 2:7.