Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காவல்காரர்

காவல்காரர்

முக்கியமாக, ராத்திரி நேரத்தில் மக்களையும் உடைமைகளையும் பாதுகாப்பவர். ஆபத்து வருவதைப் பார்த்தால் மற்றவர்களை எச்சரிப்பார். நகரத்தை நோக்கி வருபவர்களைத் தூரத்திலேயே பார்ப்பதற்கு வசதியாக, இவர் பெரும்பாலும் நகரத்து மதில்களில் அல்லது கோபுரங்களில் நிறுத்தப்பட்டார். படைப்பிரிவில் இருந்த காவல்காரர், காவலாளி என்றும் படைக்காவலர் என்றும் அழைக்கப்படுகிறார். தீர்க்கதரிசிகள் அடையாள அர்த்தத்தில் இஸ்ரவேல் தேசத்துக்குக் காவல்காரர்களாக இருந்து, வரப்போகிற அழிவைப் பற்றி எச்சரித்தார்கள்.—2ரா 9:20; எசே 3:17.