Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குலதெய்வச் சிலைகள்

குலதெய்வச் சிலைகள்

சில சமயங்களில், குறி கேட்பதற்காக இவை பயன்படுத்தப்பட்டன. (எசே 21:21) சில சிலைகள், உருவத்திலும் உயரத்திலும் மனிதனைப் போல் இருந்தன. மற்ற சிலைகளோ, சிறியவையாக இருந்தன. (ஆதி 31:34; 1சா 19:13, 16) இந்தச் சிலைகளை வைத்திருந்தவருக்குப் பரம்பரைச் சொத்து கிடைத்தது என்பதை மெசொப்பொத்தாமியாவில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. (ராகேல் தன் அப்பாவிடமிருந்து குலதெய்வச் சிலையை எடுத்ததற்கான காரணம் இதிலிருந்து புரிகிறது.) ஆனால், இஸ்ரவேலில் இந்த வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. நியாயாதிபதிகளின் காலத்திலும், ராஜாக்களின் காலத்திலும் குலதெய்வச் சிலைகளை மக்கள் வழிபட்டார்கள்; உண்மையுள்ள ராஜாவான யோசியா, மற்ற பொருள்களோடு சேர்த்து குலதெய்வச் சிலைகளையும் அழித்துப்போட்டார்.—நியா 17:5; 2ரா 23:24; ஓசி 3:4.