Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சமாரியா

சமாரியா

சுமார் 200 வருஷங்களுக்கு இஸ்ரவேல் தேசத்துடைய பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தின் தலைநகரமாக இது இருந்தது. அதோடு, அந்த ராஜ்யத்துக்குட்பட்ட பகுதி முழுவதும்கூட சமாரியா என்று அழைக்கப்பட்டது. சமாரியா மலைமேல் இந்த நகரம் கட்டப்பட்டிருந்தது. இயேசுவின் காலத்தில், வடக்கே கலிலேயாவுக்கும் தெற்கே யூதேயாவுக்கும் இடையிலிருந்த ஒரு மாகாணம் சமாரியா என்று அழைக்கப்பட்டது. பொதுவாக, சமாரியாவில் ஊழியம் செய்வதை இயேசு தவிர்த்தபோதிலும், சில சமயங்களில் இதன் வழியாகப் போனார், இந்த நகரத்தாரிடம் பேசினார். சமாரியர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தபோது, பேதுரு கடவுளுடைய அரசாங்கத்தின் இரண்டாவது சாவியை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தினார். (1ரா 16:24; யோவா 4:7; அப் 8:14)—இணைப்பு B10-ஐப் பாருங்கள்.