Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தார்க்கோல்

தார்க்கோல்

கூர்மையான உலோக முனையைக் கொண்ட நீளமான தடி. விலங்குகளை ஓட்ட விவசாயிகள் இதைப் பயன்படுத்தினார்கள். ஞானமுள்ளவரின் வார்த்தைகள், கேட்பவர்களைச் செயல்படத் தூண்டுவதால் அவை தார்க்கோலுக்கு ஒப்பிடப்படுகின்றன. அடங்காத ஒரு காளையைத் தார்க்கோலால் குத்தினாலும், அது பணிந்துபோகாமல் தார்க்கோலை உதைத்து உதைத்து தன்னையே காயப்படுத்திக்கொள்ளும். இதை வைத்துதான் “தார்க்கோலை உதைத்துக்கொண்டே இருப்பது” என்ற சொற்றொடர் வந்தது.—அப் 26:14; நியா 3:31.