Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திருச்சட்டம்

திருச்சட்டம்

கி.மு. 1513-ல் இஸ்ரவேலர்கள் சீனாய் வனாந்தரத்தில் இருந்தபோது மோசே மூலமாக யெகோவா அவர்களுக்குக் கொடுத்த முழு சட்டத் தொகுப்பை அல்லது பைபிளின் முதல் 5 புத்தகங்களைக் குறிக்கிறது. (யோசு 23:6; லூ 24:44; மத் 7:12; கலா 3:24) சில சமயங்களில், ‘சட்டம்’ என்று மட்டுமே குறிப்பிடப்படுகிற வசனங்களில், அது திருச்சட்டத்திலுள்ள ஒரு தனி சட்டத்தை அல்லது ஒரு சட்டத்திலுள்ள நியமத்தை அர்த்தப்படுத்தலாம்.—எண் 15:16; உபா 4:8, அடிக்குறிப்பு.