Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தூபப்பொருள்

தூபப்பொருள்

நறுமணப் பிசின்களும் வாசனை எண்ணெய்களும் சேர்ந்த கலவை. இது மெதுவாக எரிந்து, வாசனையான புகையைத் தரும். வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் பயன்படுத்துவதற்காக நான்கு பொருள்கள் கலந்த விசேஷ தூபப்பொருள் தயாரிக்கப்பட்டது. பரிசுத்த அறையில் இருந்த தூபபீடத்தில் காலையிலும் மாலையிலும் இது எரிக்கப்பட்டது. பாவப் பரிகார நாளன்று மகா பரிசுத்த அறையில் இது எரிக்கப்பட்டது. கடவுள் ஏற்றுக்கொள்கிற விதத்தில் அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் செய்யும் ஜெபங்களுக்கு இது அடையாளமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் இதைப் பயன்படுத்தும்படி எதிர்பார்க்கப்படவில்லை.—யாத் 30:34, 35; லேவி 16:13; வெளி 5:8.