Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நசரேயர்

நசரேயர்

‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்,’ ‘அர்ப்பணிக்கப்பட்டவர்,” ‘பிரித்து வைக்கப்பட்டவர்’ என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்தது. நசரேயர்களில் இரண்டு பிரிவினர் இருந்தார்கள். ஒரு பிரிவினர், நசரேயராக இருக்க தாங்களாகவே முன்வந்தவர்கள்; மற்றொரு பிரிவினர், கடவுளால் நியமிக்கப்பட்டவர்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நசரேயராக இருக்க விரும்புவதாக ஓர் ஆணோ பெண்ணோ யெகோவாவிடம் நேர்ந்துகொள்ளலாம். தாங்களாகவே முன்வந்து நேர்ந்துகொள்பவர்களுக்கு மூன்று முக்கியமான கட்டுப்பாடுகள் இருந்தன: (1) மது குடிக்கக் கூடாது, திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கிற எதையும் சாப்பிடக் கூடாது. (2) தலைமுடியை வெட்டக் கூடாது. (3) பிணத்தைத் தொடக் கூடாது. கடவுளால் நியமிக்கப்பட்ட நசரேயர்கள், வாழ்நாள் முழுவதும் நசரேயர்களாகவே இருந்தார்கள்; அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை யெகோவாவே அவர்களுக்குச் சொல்லியிருந்தார்.—எண் 6:2-7; நியா 13:5.