நியாயத்தீர்ப்பு நாள்
குறிப்பிட்ட தொகுதிகளுக்கு, தேசங்களுக்கு, அல்லது மனிதகுலத்துக்குக் கடவுள் தீர்ப்பு கொடுக்கிற நாள், அதாவது காலப்பகுதி. மரணத் தீர்ப்பு கொடுக்கப்பட்டவர்கள் கொல்லப்படும் சமயமாக இது இருக்கலாம், அல்லது சிலர் காப்பாற்றப்பட்டு முடிவில்லாத வாழ்வைப் பெற்றுக்கொள்ளும் சமயமாக இது இருக்கலாம். எதிர்காலத்தில் வரப்போகும் ‘நியாயத்தீர்ப்பு நாளை’ பற்றி இயேசு கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் சொன்னார்கள். உயிரோடு இருப்பவர்கள் மட்டுமல்ல, கடந்த காலத்தில் இறந்து போனவர்களும்கூட அப்போது நியாயந்தீர்க்கப்படுவார்கள்.—மத் 12:36.