Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசேயர்கள்

பரிசேயர்கள்

கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்த யூத மதத்தின் முக்கியப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குருமார் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது. திருச்சட்டத்தில் இருந்த சின்னச் சின்ன விஷயங்களைக்கூட மிகக் கறாராகப் பின்பற்றினார்கள். திருச்சட்டத்துக்குக் கொடுக்கிற அதே முக்கியத்துவத்தை வாய்மொழி பாரம்பரியங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்கள். (மத் 23:23) கிரேக்க கலாச்சாரத்தின் செல்வாக்கை எதிர்த்தார்கள். திருச்சட்டத்தையும், பாரம்பரியங்களையும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததால் மக்கள்மீது அதிகாரம் செலுத்தினார்கள். (மத் 23:2-6) சிலர் நியாயசங்க உறுப்பினர்களாக இருந்தார்கள். ஓய்வுநாள், பாரம்பரியங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கிற விஷயத்திலும், பாவிகள், வரி வசூலிப்பவர்கள் ஆகியோரோடு பழகுகிற விஷயத்திலும் இவர்கள் இயேசுவைப் பலமுறை எதிர்த்தார்கள். தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல் உட்பட பரிசேயர்களில் சிலர் கிறிஸ்தவர்களாக ஆனார்கள்.—மத் 9:11; 12:14; மாற் 7:5; லூ 6:2; அப் 26:5.