Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பலிபீடம்; தூபபீடம்

பலிபீடம்; தூபபீடம்

மண், கற்கள், பாறாங்கல் ஆகியவற்றால் செய்யப்பட்ட மேடை அல்லது, மரத்தால் செய்யப்பட்டு உலோகத் தகடு அடிக்கப்பட்ட மேடை. கடவுளை வணங்குவதற்காகப் பலிபீடத்தின்மீது பலிகள் கொடுக்கப்பட்டன, தூபபீடத்தில் தூபப்பொருள் எரிக்கப்பட்டது. தூபப்பொருளை எரிப்பதற்காக வழிபாட்டுக் கூடாரத்திலும் சரி, ஆலயத்திலும் சரி, முதல் அறையில் ஒரு சிறிய “தங்கப் பீடம்” இருந்தது. இது மரத்தால் செய்யப்பட்டு தங்கத் தகட்டால் மூடப்பட்டிருந்தது. தகன பலிகளைச் செலுத்துவதற்காக அதைவிடப் பெரிய “செம்புப் பலிபீடம்” ஒன்று வெளியே பிரகாரத்தில் இருந்தது. (யாத் 27:1; 39:38, 39; ஆதி 8:20; 1ரா 6:20; 2நா 4:1; லூ 1:11)—இணைப்பு B5 மற்றும் B8-ஐப் பாருங்கள்.