Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மரக் கம்பம்

மரக் கம்பம்

செங்குத்தான கம்பம்; கொல்லப்படப்போகும் நபரைக் கட்டி வைப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காகவும் இறந்தவரின் உடலைத் தொங்கவிடுவதற்காகவும் சில நாடுகளில் இது பயன்படுத்தப்பட்டது; மற்றவர்களை எச்சரிப்பதற்காக அல்லது இறந்துபோனவரை அவமானப்படுத்துவதற்காக உடல்கள் இப்படித் தொங்கவிடப்பட்டன. காட்டுமிராண்டித்தனமாகப் போர் செய்வதில் பேர்போனவர்களான அசீரியர்கள், கூர்மையான கம்பங்களை எதிரிகளின் அடிவயிற்றில் குத்தி, நெஞ்சுவரைக்கும் துளைத்து, அப்படியே தொங்கவிட்டார்கள். ஆனால், யூதர்களின் சட்டப்படி, கடவுளை நிந்தித்தல், சிலைகளை வழிபடுதல் போன்ற பயங்கரமான குற்றங்களைச் செய்தவர்கள், முதலில் கல்லெறியப்பட்டோ வேறு ஏதாவது முறையிலோ கொல்லப்பட்டார்கள். பின்பு, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருப்பதற்காக அவர்களுடைய உடல் கம்பங்களிலோ மரங்களிலோ தொங்கவிடப்பட்டது. (உபா 21:22, 23; 2சா 21:6, 9) ரோமர்கள் சில சமயங்களில் குற்றவாளிகளை வெறுமனே கம்பத்தில் கட்டித் தொங்கவிட்டார்கள். வலியாலும், தாகத்தாலும், பசியாலும், வெயிலாலும் பல நாட்கள் கஷ்டப்பட்டு பின்பு செத்துப்போவதற்காக அப்படித் தொங்கவிட்டார்கள். மற்ற சமயங்களில், இயேசுவுக்குச் செய்ததுபோல் குற்றவாளிகளின் கை கால்களை மரக் கம்பத்தில் ஆணியடித்தார்கள். (லூ 24:20; யோவா 19:14-16; 20:25; அப் 2:23, 36)—சித்திரவதைக் கம்பம் என்ற தலைப்பைப் பாருங்கள்.