Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மிகுந்த உபத்திரவம்

மிகுந்த உபத்திரவம்

“உபத்திரவம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, பயங்கரமான சூழ்நிலை காரணமாக வருகிற கஷ்டத்தையும் வேதனையையும் குறிக்கிறது. எருசலேமுக்கு அதுவரை வந்திருக்காத “மிகுந்த உபத்திரவம்” வரும் என்று இயேசு சொன்னார். குறிப்பாக, தான் எதிர்காலத்தில் ‘மகிமையோடு வரும்போது’ மனிதகுலத்துக்கு மிகுந்த உபத்திரவம் வரும் என்று சொன்னார். (மத் 24:21, 29-31) ‘கடவுளைப் பற்றித் தெரியாதவர்களுக்கும் இயேசுவைப் பற்றிய நல்ல செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும்’ எதிராகக் கடவுள் எடுக்கப்போகிற நீதியான நடவடிக்கைதான் மிகுந்த உபத்திரவம் என்று பவுல் விளக்கினார். ‘மூர்க்க மிருகத்துக்கும் பூமியின் ராஜாக்களுக்கும் அவர்களுடைய படைவீரர்களுக்கும்’ எதிராக இயேசு தன்னுடைய பரலோகப் படைவீரர்களோடு வருவார் என்று வெளிப்படுத்துதல் 19-ஆம் அதிகாரம் சொல்கிறது. (2தெ 1:6-8; வெளி 19:11-21) இந்த மிகுந்த உபத்திரவத்திலிருந்து ஒரு ‘திரள் கூட்டம்’ தப்பிக்கப்போகிறது என்றும் பைபிள் சொல்கிறது. (வெளி 7:9, 14)—அர்மகெதோன் என்ற தலைப்பைப் பாருங்கள்.