Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மீட்புவிலை

மீட்புவிலை

அடிமைத்தனம், தண்டனை, கஷ்டம், பாவம் ஆகியவற்றிலிருந்து அல்லது ஏதோ ஒரு கடமையிலிருந்து விடுபடுவதற்காகக் கொடுக்கப்படும் தொகை. பணம் மட்டுமே மீட்புவிலையாகக் கொடுக்கப்படவில்லை. (ஏசா 43:3) பல்வேறு சூழ்நிலைகளில் மீட்புவிலை தேவைப்பட்டது. உதாரணத்துக்கு, முதலில் பிறந்த ஆண் பிள்ளைகள் அல்லது மிருகங்களின் முதல் ஆண் குட்டிகள் யெகோவாவுக்குச் சொந்தமாக இருந்தன. யெகோவாவின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டிய இந்தப் பிள்ளைகளை அல்லது குட்டிகளை, அதிலிருந்து விடுவிப்பதற்கு மீட்புவிலை தேவைப்பட்டது. (எண் 3:45, 46; 18:15, 16) கட்டி வைக்கப்படாத ஒரு முரட்டு மாடு யாரையாவது கொன்றுவிட்டால், அந்த மாட்டின் சொந்தக்காரர் மரண தண்டனையிலிருந்து விடுபடுவதற்காக மீட்புவிலை கொடுக்க வேண்டியிருந்தது. (யாத் 21:29, 30) ஆனால், வேண்டுமென்றே கொலை செய்தவருக்காகக் கொடுக்கப்பட்ட மீட்புவிலை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (எண் 35:31) கீழ்ப்படிதலுள்ள மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்காக இயேசு தன் உயிரையே பலியாகக் கொடுத்தார். இந்த மீட்புவிலையைப் பற்றித்தான் பைபிள் முக்கியமாகப் பேசுகிறது.—சங் 49:7, 8; மத் 20:28; எபே 1:7.