Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மேதியர்கள்; மேதியா

மேதியர்கள்; மேதியா

யாப்பேத்தின் மகனான மாதாயின் வம்சத்தில் வந்தவர்கள்தான் மேதியர்கள். மலைப்பகுதியான ஈரான் பீடபூமியில் இவர்கள் குடியேறினார்கள். பிற்பாடு இது மேதிய தேசமானது. அசீரியாவைத் தோற்கடிப்பதற்காக பாபிலோனியர்களோடு மேதியர்கள் சேர்ந்துகொண்டார்கள். பெர்சியா அந்தச் சமயத்தில் மேதியாவின்கீழ் ஒரு மாகாணமாக இருந்தது. கோரேஸ் கலகம் செய்ததால், பெர்சியாவோடு மேதியா இணைக்கப்பட்டு மேதிய-பெர்சிய சாம்ராஜ்யம் உருவானது. புதிய பாபிலோன் சாம்ராஜ்யத்தை கி.மு. 539-ல் இது தோற்கடித்தது. கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று மேதியர்கள் சிலர் எருசலேமில் இருந்தார்கள். (தானி 5:28, 31; அப் 2:9)—இணைப்பு B9-ஐப் பாருங்கள்.