Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முடிவுரை

முடிவுரை

யெகோவாவின் மக்களோடு சேர்ந்து அனுபவித்த சந்தோஷமான நேரங்களை நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா? சபையில் நீங்கள் கேட்ட ஒரு பேச்சு, மறக்க முடியாத மாநாடு, ஊழியத்தில் கிடைத்த நல்ல அனுபவம், சகோதர சகோதரிகளோடு சந்தோஷமாக பேசி சிரித்த நினைவுகள் ஆகியவையெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றனவா? அப்படியென்றால், நீங்கள் இன்னும் யெகோவாவை மறக்கவில்லை என்றும், அவரும் உங்களை மறக்கவில்லை என்றும் அர்த்தம்! நீங்கள் உண்மையாக செய்த சேவையையும் அவர் மறக்கவில்லை. நீங்கள் திரும்பி வருவதற்கு உங்களுக்கு உதவ, அவர் ஆசை ஆசையாகக் காத்திருக்கிறார்.

“இதோ, நானே போய் என்னுடைய ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன். நானே அவற்றைக் கவனித்துக்கொள்வேன். சிதறிப்போன ஆடுகளைக் கண்டுபிடித்து கவனித்துக்கொள்கிற மேய்ப்பனைப் போல நான் என்னுடைய ஆடுகளைக் கவனித்துக்கொள்வேன். . . . சிதறிப்போன என் ஆடுகளை எல்லா இடங்களிலிருந்தும் காப்பாற்றிக் கொண்டுவருவேன்.” ​—எசேக்கியேல் 34:11, 12.