Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

உகாண்டா

ஆன்மீக விஷயங்களில் ஆர்வப் பசியுள்ள உகாண்டாவாசிகள், தங்கள் நாட்டின் சரித்திரத்திலேயே மிகக் கொடிய காலங்களின்போது சத்தியத்தில் சகித்து நின்றதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். தடையுத்தரவின் போதும்கூட இவர்களால் எப்படித் திறந்தவெளியில் கூட்டங்களை நடத்த முடிந்தது என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஓப்வாகாபாகா புவா காடோன்டா என்பதன் அர்த்தத்தையும், விசுவாசமுள்ள இந்தச் சகோதர சகோதரிகளுடன் அது உங்களை ஒன்றுபடுத்துகிற விதத்தையும் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள்.

அல்பேனியா

எல்லா மத நடவடிக்கைகளும் ஒழிக்கப்பட்டபோதிலும் உண்மை வணக்கம் எப்படி நிலைத்து நின்றது? மணிக்கணக்காகக் கொடூரமாய்ச் சித்திரவதை செய்யப்பட்டபோதிலும் நம் சகோதரர்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்தார்களா? மரணப் படுக்கையிலிருந்த உண்மையுள்ள சகோதரர் ஒருவர், சிறைதண்டனை பெறவிருந்த இளம் சகோதரர்களுக்கு என்ன அறிவுரை கொடுத்தார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை, உண்மையாகவும் உத்தமமாகவும் நிலைத்திருந்த சகோதரர்களைப் பற்றிய உற்சாகமளிக்கும் இந்தப் பதிவிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

பெலிஸ்

பல்வேறு கலாச்சாரங்கள் நிறைந்த இந்த நாட்டில் மனத்தாழ்மையும் கடின உழைப்புமிக்க யெகோவாவின் ஊழியர்கள் சத்தியத்தை ஆர்வமாகக் கற்பித்து வந்திருக்கிறார்கள். “போர்க்களத்தில்” என்ன நடந்தது என்பதையும் மூர்க்கமாய்த் தாக்கிய ஹட்டி சூறாவளியை யெகோவாவின் சாட்சிகள் எப்படிச் சமாளித்தார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். மனதுக்கு இதமளிக்கும் பெலிஸ் பவளப் பாறைப் பகுதியில் செய்யப்பட்ட ஊழியத்தைப் பற்றி வாசியுங்கள்.