கடவுளுடைய சித்தத்தைச்செய்வதில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்
கடவுளுடைய சித்தத்தைச்செய்வதில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்
யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம், கூட்டங்கள் மற்றும் அமைப்பைப் பற்றி இந்தச் சிறு புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல், கடவுளைத் தொழுதுகொள்வதில் அவர்களோடு அதிக முழுமையாகக் கூட்டுறவுகொள்ள வாசகராகிய உங்களை உற்சாகப்படுத்தும் என்று நம்புகிறோம். யெகோவாவின் சாட்சிகளுடைய சபையோடு நீங்கள்தாமே நேரில் கூட்டுறவுகொண்டு, அவர்களுடைய மாநாடுகளில் ஆஜராவதன் மூலம் சாட்சிகளைப்பற்றி நேரடியாகத் தெரிந்துகொள்ள நாங்கள் உங்களை அழைக்கிறோம். இது இந்தச் சமயத்தில் கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய உங்களுடைய புரிந்துகொள்ளுதலை அதிகமாக்க உதவி செய்யும்.—தீத்து 2:11-14.
நற்கிரியைகளில் பைபிளின் தராதரத்திற்கு ஏற்ப உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் அமைத்துக்கொள்ளும்போது, யெகோவாவின் சாட்சிகளோடு அவர்களுடைய வேலையில் பங்குகொள்ளும் சிலாக்கியமும் உங்களுக்கு இருக்கும். உலகளாவிய சகோதர கூட்டுறவின் அனலான தோழமையை அனுபவித்துக் களிப்பதோடுகூட, தற்போதைய ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப்பிழைத்து, சமாதானமும் நீதியும் வாசமாயிருக்கும் புதிய ஒழுங்கினுள் செல்வதையுங்கூட நீங்கள் எதிர்நோக்கியிருக்கக்கூடும்.—2 பேதுரு 3:13.
[பக்கம் 30, 31-ன் படங்கள்]
200-க்கும் மேற்பட்ட தேசங்களிலும் சமுத்திரத்தின் தீவுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அதில் 18 தேசங்களிலிருந்து காட்சிகள்
நைஜீரியா
ஆஸ்திரியா
பிரேஸில்
ஜப்பான்
கனடா
குவாதமாலா
அர்ஜன்டினா
ஜெர்மனி
தைவான்
பின்லாந்து
தென் ஆப்பிரிக்கா
இந்தியா
அமெரிக்கா
பிஜி
சில்லி
இத்தாலி
பொலிவியா
பிலிப்பீன்ஸ்
[பக்கம் 32-ன் படங்கள்]
“ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்.”—மத்தேயு 24:14.