அன்பு—ஐக்கியத்தின் ஒரு பூரண கட்டு
பாட்டு 173
அன்பு—ஐக்கியத்தின் ஒரு பூரண கட்டு
1. அநேகருடைய அன்பு
தணிந்ததே இன்று.
நாமோ இப்போக்கைத் தவிர்த்து
காண்பிப்போம் மெய்யன்பு.
நாம் தேவனைப் பின்பற்றினால்
ஊன்றுவோம் இப்பண்பு.
உள்ளத்தில் பொங்குகிறது
தேவன்காட்டும் அன்பு.
2. மாய்மாலமற்ற ஓர் அன்பு,
ஆழமான ஒன்று.
நாம் வளர்த்து தாராளமாய்க்
காட்டவேண்டியது.
சகோதரர் உள்ளம் எட்ட
விரிவாக்கிடுவோம்.
தேவன் நேசிப்பவர்களை
நாம் நேசித்திடுவோம்.
3. இவ்வொழுங்கு அழியவே,
அன்பில் ஐக்கியம் வேண்டும்.
இது ஐக்கியத்தின்கட்டு,
பற்றிக்கொள்ளவேண்டும்.
ஒவ்வொருவருக்கும்தேவை
பாசமும் கனிவும்.
நம்வேலை முடியும்வரை
ஒற்றுமையாய் வைக்கும்.
4. தேவனோடு நல்லுறவு
வெற்றிபெறச் செய்யும்.
நம்மைப்போல் பிறர்
நேசிப்போம் இந்தக்காலத்திலும்.
நமதன்பு ஆழமாக
மெய்யாயிருக்கட்டும்.
அன்பு ஐக்கியத்தின்
பூரணகட்டாய் நிரூபிக்கும்.