அரசராயிருக்கும் நம் தேவனைப் போற்றிப் புகழுதல்
பாட்டு 148
அரசராயிருக்கும் நம் தேவனைப் போற்றிப் புகழுதல்
1. யெகோவாவுக்குப் பாடுங்கள்!
நாள் முழுவதும் போற்றுங்கள்.
பெயரை முன்னறிவிப்போம்;
அவரிடம்நெருங்குவோம்.
தம் கரங்கள் திறக்கிறார்,
நமக்கு உதவுகிறார்.
உத்தமராயிருப்போமே;
நம் யெகோவா நல்லவரே.
2. நாம் உண்மையாயிருப்போமே.
“உம்மைத்துதிப்பேன்,” என்போமே.
யெகோவா நீதியுள்ளவர்,
அவர் துதிக்குப் பாத்திரர்.
தம்மை நேசிப்போரைக் காப்பார்,
வாழ்க்கையை இலகுவாக்குவார்.
அழுத்தங்களில் துணையே;
யெகோவாவைத் துதிப்போமே.
3. தேவராஜ்யம் சமீபமே.
சிறந்தவற்றைச் செய்வோமே.
‘திருப்த்தயடைந்த’ நீங்கள்
ராஜ்யத்தைப் பிரசங்கியுங்கள்.
தம் ராஜாவை உயர்த்தினார்;
எதிர்ப்போர் எவரும் இரார்.
துன்மார்க்கர் அழிவார்கள்.
தேவாட்சி நிலைக்குமே.