“ஆண்மையுடன் நடந்து கொள்ளுங்கள்”
பாட்டு 134
“ஆண்மையுடன் நடந்து கொள்ளுங்கள்”
1. ‘இதோ! இந்தமனிதன்!’ என்றானே;
பிலாத்து குறிப்பிட்டது இயேசுவே.
பகைகொண்ட சாத்தான் உலகையே அஞ்சா
ஆண்மையுடன் வெற்றிகொண்டாரே.
2. இயேசு நல்முன்மாதிரி வைத்தாரே.
அவர் போல் நாமும் இருக்க வேண்டுமே.
அர்மகெதோன் போர் எதிர்ப்படுவோம்.
தைரியமாக ஆண்மையுடன் நடப்போம்.
3. ஆண்மையுடன் கூடிய தைரியம்
யெகோவாவின் மக்களுக்கவசியம்.
முடிவு சமீபித்து வரவே
ராஜ்ய சேவையில் வேண்டும் தைரியமே.
4. யெகோவாவின் ஊழியரெல்லாருமே
இயேசு ராஜாவை நோக்கியிருப்பரே.
அஞ்சாமல் உறுதியாயிருப்பீர்.
ஆண்மையுள்ளோர் வெற்றிக் கீதம் பாடுவீர்.