Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆவியின் கனி

ஆவியின் கனி

பாட்டு 163

ஆவியின் கனி

லாத்தியர் 5:22, 23)

1. தேவாவியின் கனியை ஈன்று

காப்பாற்ற வேண்டும் முயன்று.

தேவனுக்கு கனம்கொடுக்கும்.

புதொழுங்கில் உயிர்காக்கும்.

தெய்வீக தூய அன்பை நாமே

எப்பொழுதும் காண்பிப்போமே.

ஆம், சந்தோஷம் அனைவருக்கும்

சகிக்க பலம் கொடுக்கும்.

2. தேவசமாதானமே வேண்டும் செழிப்பு,

ஐக்கியம் தந்திடும்.

அனைத்தையும் தாங்கிடும்

தன்மைதருமே நீடியபொறுமை

செவிசாய்க்கத் தூண்டும் தயவு

நற்பலன்கொண்ட தயவு!

ராஜ்ய வேலையில் தேவைப்படும்

கற்பை நற்குணம் காத்திடும்.

3. தைரியம் தந்திடும் விசுவாசம்

வாழ்வின் நோக்கத்தில் பிரகாசம்.

சாந்தம் மிகவும் சிறந்ததே!

சண்டை, பகை நீக்கிடுமே.

இச்சையடக்கம் கொண்டிருப்போம்

நாம் நிராகரிக்கப்படோம்.

இக்கனிகள் நித்தம் வளர்ப்போம்,

தேவ தயவைப் பெறுவோம்.