Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரக்கமுள்ளவர்கள், மகிழ்ச்சியுள்ளவர்கள்!

இரக்கமுள்ளவர்கள், மகிழ்ச்சியுள்ளவர்கள்!

பாட்டு 62

இரக்கமுள்ளவர்கள், மகிழ்ச்சியுள்ளவர்கள்!

(மத்தேயு 5:7)

1. இரக்கமுள்ளோர் இன்பரே!

தேவனுக் கழகானோரே.

நேர்மையுள்ளோர்க்கு சொல்வோமே.

கர்த்தர்க்கிரக்கம் இன்பமே.

மீட்கும் பொருள் கொடுத்தாரே;

கல்வாரியில் காண்பித்தாரே.

பலவீனம் அறிகிறார்,

தாழ்ந்தோருக்கிரங்குகிறார்.

2. இரக்கமுள்ளோர் பாக்கியரே;

மன்னிப்பு பெற்றிடுவரே,

கிறிஸ்து ஆட்சிக்கு வந்தாரே,

இரக்கமும் பெற்றனரே.

தேவவார்த்தை பிரசங்கிப்பர்,

இரக்கம் பகிர்ந்தளிப்பர்.

‘உற்சாகமாயிருப்பீரே,’சொல்வர்,

‘தேவராஜ்யம் இங்கே.’

3. நியாயத்தீர்ப்பை தாம்மேற்கொண்டார்.

இரக்கமுள்ளோர் அஞ்சிடார்.

தேவ இரக்கம் அறிவர்;

அவ்விரக்கத்தைக் காண்பிப்பர்.

எப்பொழுதும் இரங்குவோம்;

கனிவாய் நடந்துகொள்வோம்.

வாய்ப்பை பயன்படுத்துவோம்;

நம்தேவனைப் பின்பற்றுவோம்.

பிற்பல்லவி

இரக்கமுள்ளோர் இன்பரே!

தேவனுக் கழகானோரே.