இரக்கமுள்ளவர்கள், மகிழ்ச்சியுள்ளவர்கள்!
பாட்டு 62
இரக்கமுள்ளவர்கள், மகிழ்ச்சியுள்ளவர்கள்!
1. இரக்கமுள்ளோர் இன்பரே!
தேவனுக் கழகானோரே.
நேர்மையுள்ளோர்க்கு சொல்வோமே.
கர்த்தர்க்கிரக்கம் இன்பமே.
மீட்கும் பொருள் கொடுத்தாரே;
கல்வாரியில் காண்பித்தாரே.
பலவீனம் அறிகிறார்,
தாழ்ந்தோருக்கிரங்குகிறார்.
2. இரக்கமுள்ளோர் பாக்கியரே;
மன்னிப்பு பெற்றிடுவரே,
கிறிஸ்து ஆட்சிக்கு வந்தாரே,
இரக்கமும் பெற்றனரே.
தேவவார்த்தை பிரசங்கிப்பர்,
இரக்கம் பகிர்ந்தளிப்பர்.
‘உற்சாகமாயிருப்பீரே,’சொல்வர்,
‘தேவராஜ்யம் இங்கே.’
3. நியாயத்தீர்ப்பை தாம்மேற்கொண்டார்.
இரக்கமுள்ளோர் அஞ்சிடார்.
தேவ இரக்கம் அறிவர்;
அவ்விரக்கத்தைக் காண்பிப்பர்.
எப்பொழுதும் இரங்குவோம்;
கனிவாய் நடந்துகொள்வோம்.
வாய்ப்பை பயன்படுத்துவோம்;
நம்தேவனைப் பின்பற்றுவோம்.
பிற்பல்லவி
இரக்கமுள்ளோர் இன்பரே!
தேவனுக் கழகானோரே.