Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞரே! அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

இளைஞரே! அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

பாட்டு 221

இளைஞரே! அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

(எபிரெயர் 6:12)

1. இளம்சாமுவேல் சீலோவுக்குச் சென்றார்.

ஆலயத்தில் சேவைசெய்து வளர்ந்தார்.

இஸ்ரவேலின் தீர்க்கதரிசியானார்.

நசரேயனாய் தேவனைத் துதித்தார்.

ஏலியின் துன்மார்க்கக் குமாரர்களோ?

இளம் சாமுவேலைக் கெடுப்பார்களோ?

இல்லை, உண்மையாய்க் கீழ்ப்படிந்துவந்தார்.

யெகோவாவிட்டு விலகாதிருந்தார்.

2. இளம் தீமோத்தேயு நல்மூப்பரானார்.

குழந்தைமுதல் வேதத்தை அறிந்தார்.

தாம் கற்றுக்கொண்டதைக் கடைப்பிடித்தார்.

தொடர்ந்துண்மையாயிருக்க முயன்றார்.

தன்சபையிலே நற்பெயரைப் பெற்றார்.

ஏகமாய்ப் பரிந்துரை செய்யப்பட்டார்.

பவுலோடு செல்லும் சிலாக்கியம் பெற்றாரே.

மிஷனரி சேவை ஆசீர்வாதமே.

3. இளம் சகோதரிகளே, நினைப்பீர்.

இஸ்ரவேல் சிறுமியை எண்ணிப்பார்ப்பீர்

சிறைப்பட்டாலும் முத்தான விசுவாசம்.

பிறரைத் தூண்டின பக்தி வைராக்கியம்.

நாகமான் மனைவியிடம் சொன்னாளே:

‘மெய்த்தீர்க்கதரிசியால் சுகமுண்டே.

’கேட்ட சீரிய படைத்தலைவன் சென்றான்.

இச்செயலால் ஆசீர்வாதங்கள் பெற்றான்.

4. இளம் சகோதர சகோதரிகள்,

இம்முன்மாதிரிகளைப் பின்பற்றுங்கள்.

இந்நாட்களில் பெரும் பொறுப்பளித்தார்

தாம் தெரிந்துகொண்டோரை அனுப்புவார்.

இளைஞரே, போராடிட வாருங்கள்.

தேவஊழியரோடு சேர்ந்துகொள்ளுங்கள்.

எச்சரிப்போம்; அவர் புகழ்பேசுவோம்.

நாட்களின் முடிவில் பலன்பெறுவோம்.