உத்தம வணக்கத்தார் யெகோவாவைத் துதிக்கிறார்கள்
பாட்டு 136
உத்தம வணக்கத்தார் யெகோவாவைத் துதிக்கிறார்கள்
1. உத்தமர்கள் சேர்ந்து துதிப்பர்,
கர்த்தாவே, செழித்திட அருள் புரிவீரே.
துதிக்குப் பாத்திரர், நியாயம்உம் வழிகள்,
உத்தமராய்ச் செய்வோம் உம்வேலைகள்.
2. உம்மைக்கனம் செய்வோம், நன்றியில் குறையோம்,
செயலில் கவனம், தூய்மை காப்போம்.
விசுவாசம் கூட்ட உதவி செய்வீரே,
நாள்தோறும் உண்மையாய் இருப்போமே.
3. உம்ராஜ்ய நோக்கத்தை விளங்கிடச் செய்யும்,
விளங்கும் கரத்தின் மகிமையும்.
விழாமலிருக்க நல்வழி காண்பியும்,
இடைவிடா ஜெபம் கேட்டருளும்.
4. பிரசங்க வேலையில் உம்மைத் துதிக்கவும்,
அச்சம் மேற்கொள்ளவும் நீர்உதவும்.
பூமியெங்கும் உம்மைத் துதித்திடும்போதும்,
உம் புகழ் ஓங்கவே, சாந்திதாரும்.