எங்கள் கூட்டத்தை ஆசீர்வதியும்
பாட்டு 28
எங்கள் கூட்டத்தை ஆசீர்வதியும்
1. யெகோவாவே ஜெபிக்கிறோம்,
ஆசீர்வாதம் பொழியும்.
கூட்டங்களுக்கெங்கள் நன்றி,
உம் ஆவி நிலைக்கட்டும்.
2. ஆவிக்குரிய தேவைகளை
வார்த்தையால் பூர்த்திசெய்யும்.
நாவு, மனம்பயிற்சித்து,
அன்பை வளர்த்தருளும்.
3. வணக்கத்திற்கான கூட்டம்,
பரிசுத்தத்தைக் காப்போம்.
உம்மைநன்றாக அறிந்து
தாழ்மையாக இருப்போம்.
4.கூட்டங்கள் ஆசீர்வதித்து
அமைதி அருள்வீரே.
உம் அரசுரிமை போற்றி
உம்மையே சேவிப்போமே.