“எனக்குச் சித்தமுண்டு”
பாட்டு 156
“எனக்குச் சித்தமுண்டு”
1. தேவ மகன் அன்பு கூர்ந்தார்,
பரமவீட்டையும் விட்டார்.
மக்களுடன் வாழ,
சத்தியம் கொடுக்க அவர்வாய் சத்தியம் பொழிந்தது.
மனிதகுலம் தேற்றினார்,
நோய், ஊனம் குணமாக்கினார்.
தம் வேலைக்கு உண்மையாயிருந்தார்,
“எனக்குச்சித்தமுண்டு,” என்றார்.
2. யெகோவா உதவினாரே ‘உண்மை ஊழியர்’மூலமே.
சேர்ந்து சேவிக்கிறோம்,
மகிழ்ந்துழைக்கிறோம்.
தேவையிலிருப்போரை மீட்க!
நேசிக்கிறோம் நன்றாகவே
என்றவர்கள் சொல்வார்களே.
உங்களை திக்கற்றோர் கேட்கும்போது
சொல்வீர்களா,“ஆம்,சித்தமுண்டு”?
3. அன்பு பிரசங்கிக்கத் தூண்டும்,
பொறுமையாய் கற்பிக்கவும்
பெருமூச்சுவிட்டு துக்கிப்பவருக்கும்
சத்தியத்தைக்கொண்டு செல்லவேண்டும்.
பைபிள் சத்தியங்கள் வாக்குகள்
புரிந்தோராய் மகிழ்வார்கள்.
உண்மையாய் தேவசேவை செய்வரே!
நாமும் “சித்தமுண்டு” என்றோமே.