எமது கிறிஸ்தவ சகோதரத்துவத்தை ஆசீர்வதியும்
பாட்டு 18
எமது கிறிஸ்தவ சகோதரத்துவத்தை ஆசீர்வதியும்
1. கிறிஸ்து பொறுமையாய்,
தயவாய்க் கற்பித்தார்.
சீஷருக்குத்தேவ
சமாதானம் தந்தார்.
உண்மை சகோதரத்துவ
அன்பையே காட்டினார்.
தாழ்மைக்கு, உண்மைத்தன்மைக்கு
முன்மாதிரியானார்.
(பல்லவி)
2. தேவவார்த்தை கேட்போர்
மகிழ்ச்சியுள்ளவர்!
ஆசிபெற்றிருப்போர்
சாந்தகுணத்தவர்!
கிறிஸ்துவின்சீஷர் காட்டுவர்
சகோதர அன்பு,
நன்மை செய்கின்றனர்,
ராஜ்ய ஆட்சி அறிவித்து.
’(பல்லவி)
3. சத்தியம் நேசிப்போர்க்கு
ராஜ்ய செய்தி சொல்வோம்.
தேவன் சார்பிருத்தல்
சிலாக்கியம் காணச்செய்வோம்.
அவரைத்தேடிக் கண்டிட
உதவி அளிப்போம்.
நம் சகோதரத்துவத்தில்
மகிழ்ந்திடச் செய்வோம்.
(பல்லவி)
யெகோவாவே,
நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
சகோதரத்துவம்மீது
ஆசீர்வாதம் வேண்டுகிறோம்.