Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புடையவர்களாய் இருங்கள்”

“ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புடையவர்களாய் இருங்கள்”

பாட்டு 115

“ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புடையவர்களாய் இருங்கள்”

(1 பேதுரு 4:8)

1. நம் ஊக்கமான அன்பு

எல்லாம் சகிக்கிறது,

கடவுள் தயை பெற்று

நாம் சேவிக்கவே.

கிறிஸ்துவை அனுப்பினார்

தம் அன்பைக் காண்பித்தாரே.

நம் உறவை சீர்

செய்தார் ஒன்றுபடவே.

தேவபயமுள்ளோராய்,

அன்பை அணிந்தவராய்

கிறிஸ்து பாதை செல்வோராய்

காட்டுவோம் அன்பு.

பகைகொண்ட உலகு,

நம் ஊக்கமான அன்பு

மேன்மையானதோர் பண்பு,

தேவன் பின்பற்று, தேவன்பின்பற்று.

2. மாய்மாலமற்ற அன்பு

பிறர்புண்படுத்தாது.

சகோதரருக்கன்பு

காட்டிடுவோமே.

பொறுமை தயை காட்டும்,

பிறரை உட்படுத்தும்,

சகோதரர் குறையும்

அது பின்வைக்கும்.

முடிவுசமீபமே,

நாமும் புரிந்துகொள்வோம்

மக்களிடமாய் அன்பை

விரிவாக்குவோம்!

பரமஞானம் கொண்டு

எல்லாரையும் நேசித்து

தேவனை நித்தியத்திற்குப்

பின்பற்றுவோமே, பின்பற்றுவோமே.