Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கன்மலை யெகோவாவைத் துதி

கன்மலை யெகோவாவைத் துதி

பாட்டு 41

கன்மலை யெகோவாவைத் துதி

(உபாகமம் 32:4)

1. பூமி, வானங்கள், செவிகொடுங்கள்;

சாந்தமக்களே, செவிசாயுங்கள்.

என்போதகம் பனித்துளிகளாகும்;

சத்தியங்கள் மழைபோல பொழிந்திடும்.’

2. யெகோவாபேரை நாம் தெரிவிப்போம்;

அவர்வல்லமை, புகழ்சொல்லுவோம்.

அவர்நம்கன்மலை; ஆடுபோற்றட்டும்;

அவர் செயலை மந்தை புகழட்டும்.

3. துதிக்குப் பாத்திரர், உண்மையுள்ளவர்,

வழிகள் நியாயம், அன்புடையவர்;

சத்தியம், நீதியின் தத்ரூபம் அவரே;

உண்மையுள்ள கன்மலை யெகோவாவே.

4. மெய்த்தேவனுக்குப் பயப்படுவோம்.

கற்பனைகளில் களிகூருவோம்,

நாசத்திற்கேதுவாக செயல்படோம்;

‘யா’வைதூய நெஞ்சுடனே சேவிப்போம்.