Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தெய்வீக பொறுமைக்கு நன்றி

தெய்வீக பொறுமைக்கு நன்றி

பாட்டு 81

தெய்வீக பொறுமைக்கு நன்றி

(2 பேதுரு 3:15)

1. யெகோவாவே, வல்லவரே,

அழகாகப் படைத்தீரே.

வானம், பூமியின் சிருஷ்டிகள்

இந்த உண்மைக்கு சாட்சிகள்.

சத்தியத்தை நேசிப்பவர்கள்

அவ்வழகில் பூரிப்பார்கள்.

கூடுதல் எழில்காண்பரே

உம் ஆட்சியின் வெற்றியிலே.

2. நீதிக்கு உமதார்வமே

துன்மார்க்கம் ஒழித்திடுமே.

ஆனால் எம்மை விட்டுவைத்தீர்.

எங்களுக்கு மீட்பளித்தீர்.

உம்பேர் தாங்கியிருப்பவர்,

நன்றியாய்த் துதிபாடுவர்

உம்பொறுமையைக் காண்பரே,

உம்ஆட்சியின் வெற்றியிலே.

3. உம்பொறுமையை மதிப்போம்,

பிரசங்கிக்கப் பிரயோகிப்போம்.

உமது தேவத்தன்மைகள்

உம்வார்த்தையிலே காண்பார்கள்.

அவர்கள் மீட்படைந்திட

உதவும் வழிகாட்டிட

எம்முடன் சேர்ந்து காண்பரே,

உம் ஆட்சியின் வெற்றியிலே.