தேவனுடைய ஏற்பாட்டில் இளைஞர் வகிக்கும் இடம்
பாட்டு 183
தேவனுடைய ஏற்பாட்டில் இளைஞர் வகிக்கும் இடம்
1. இளையோர், முதியோரை அழைக்கிறாரே.
தேவஏற்பாட்டில் ஓர் இடம் உள்ளதே.
இளையோர் நன்கு பிரதிபலிக்கிறார்கள்.
ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள்.
திறமையோடு சாட்சி கொடுக்கிறார்கள்.
ஒழுங்காய் பண்புடன் நடக்கிறார்கள்!
தேவனுக்கு விலையேறப் பெற்றவர்கள்
முதியோரையும் மகிழ்விக்கிறார்கள்.
2. யெகோவாவை அறிந்துள்ள இளைஞரே,
அந்நாளின் இன்பம் மகிழ்ச்சிதான் என்னே!
எதிர்காலத்திலே காத்திருப்பவைகள்,
என்றென்றும் பரதீஸ், எண்ணிப்பாருங்கள்!
இவ்வொழுங்கின் அழுத்தத்தில் வாழ்கிறோமே.
இதுவும் விரைவில் “மண்ணைநக்குமே.”
இவற்றை மேற்கொள்ள போராடிடவேண்டும்.
ராஜ்ய உத்தமத்தைக் காத்திடவேண்டும்.
3. தேவமக்களில் உண்டு நல்லநண்பர்கள்,
ஏன்வேண்டும் பொல்லா உலகநட்புகள்?
பக்திவிருத்திக் கானவை செய்யவேண்டும்.
இதை தேவவார்த்தையில் காணவேண்டும்.
பிரச்னைபோது நேசிப்போரை நாடவேண்டும்.
பாரமானவை எல்லாம் சொல்ல வேண்டும்.
மிகவும் பெரிய நண்பர் யெகோவாவே.
புரிந்து இரக்கமும் காண்பிப்பாரே.
4. நாம் கிறிஸ்தவ சபையின் உறுப்பினர்கள்.
கிறிஸ்து பூர்த்தி செய்கிறார் நம் தேவைகள்.
அவர் பக்கம் உத்தமமாக நிலைப்போம்.
ஆலோசனைகளை ஏற்று நடப்போம்.
உலகவார்ப்பில் அமைய இடங்கொடோம்.
தேவவார்த்தையால் மனசுத்தம் காப்போம்.
இளைஞர், முதியோர், உண்மையாயிருப்போம்.
நித்தியத்திற்கும்அவரைத் துதிப்போம்.